சுவிசில் கரும்புலிகள் நாள் 2026
மேலும்Day: May 31, 2026
உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு – 2026.
தமிழரின் தேசிய சுதந்திர இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதையில் முப்படைகளையும், இறையாண்மை மிக்க அரசிற்கான நிர்வாகக் கட்டமைப்புகளையும் உருவாக்கி, நடைமுறைத் தமிழீழ அரசை நிறுவிய வரலாற்று நாயகன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு 31.05.2026, இன்று சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரிலுள்ள Schulhausstrasse 12, 8182 Hochfelden என்ற இடத்தில், மேதகு வே. பிரபாகரன் நினைவெழுச்சி அகவத்தின் ஒழுங்குபடுத்தலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மேலும்எழுச்சிக்குயில் 2026 தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி
தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் 11ஆவது தடவையாக நடாத்திய ‘எழுச்சிக்குயில் 2026’ தமிழீழ எழுச்சிப்பாடற்போட்டி கடந்த மே 8, 9 சனி, ஞாயிறு இருநாள்களும் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த கலைஞர்களுள் தமிழீழத் தேசிய மாவீரர் பணிமனை சுவிஸினால் சேகரிக்கப்பெற்று வடிவமைக்கப்பெற்ற 72 கலைஞர்களின் திருவுருவப் படங்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும்