இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம்

ஈழநாதம் மக்கள் நாளிதழ் 1990 ஆம் ஆண்டு மாசி மாதம் 19 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஈழநாதம் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து நாளாந்த பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிவந்துகொண்டிருந்த இப்பத்திரிகை இலங்கையில் நடைபெறும் பெரும்பாலான முக்கிய செய்திகளை வெளியிட்டு வந்ததுடன் தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த துன்பங்களையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய பத்திரிகைகளில் வடக்கின் முன்னணி நாளிதழாக இருந்தது.1995 ஆம் ஆண்டு சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் யுத்தத் தை அடுத்து யாழ்ப்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சாவகச்சேரி கல்வயல் பகுதியில் இயங்கிவந்தது. பின்னர் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்திருந்த ஈழநாதம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தது.

மேலும்

பொய்யாமொழிப்புலவர் திருவள்ளுவரின் நிலையுடன் கூடிய சுற்றுவட்டத்தினை அமைக்க உதவிய அத்தனை பேருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

எமது தூய நகரம் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட அனைத்து சுற்றுவட்டங்களையும் அழகுபடுத்துவது தொடர்பில் சுற்றுவட்டாரங்கள் அனைத்துக்கும் நகர வடிவமைப்பாளர்களைக் கொண்டு திட்ட வரைபுகளை வடிவமைத்திருந்தேன்.

மேலும்