லெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அண்ணா அவர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் சிறப்பெழுச்சிகொண்ட வன்னிமயில் 12 ஆவது ஆண்டு முதல் மூன்று நாள் நிகழ்வுகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 12 ஆவது ஆண்டாக வன்னிமயில் – 2023 தேச விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டி முதல் நாள் நிகழ்வுகள் கடந்த 25 ஆம் (சனி), 26 ஆம் (ஞாயிறு), மற்றும் 27 ஆம் (திங்கள்) நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமெனில் பகுதியில் மிகவும் சிறப்பெழுச்சியாக இடம்பெற்றன. மூன்று நாட்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு மாவீரர் குடும்பத்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

மேலும்