பிரான்சில் பாரிஸ் உள்ளிட்ட 12 இடங்களில் மாவீரர் நாள் நடை பெறும் இடங்கள் பற்றிய விபரங்களை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், கோவிட் தடுப்பூசி ஏற்றிய அத்தாட்சிப் பத்திரத்தை தம்மோடு வைத்திருப்பது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாக சுவிஸ் நாடு தழுவிய வகையில் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ் நடாத்திய பேச்சுப்போட்டி மற்றும் கவிதைப்போட்டி

சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் இளையோரும் வளர்ந்தவர்களும் தமது இன அடையாளங்களையும் மாவீரர் தியாகங்களையும் அறிந்துபோற்றுவதற்காகவும்இ பேச்சாற்றலையும் கவிகளை ஆக்கிக் கவிபாடும் திறனையும் வளர்த்துக்கொள்வதற்காகவும் பேச்சுப்போட்டிஇ கவிதைப்போட்டி ஆகியன நடாத்தப்பெற்று வருகின்றன.அந்தவகையில்இ கடந்த 13.11.2021 சனிக்கிழமை சூரிச்இ பேர்ண் ஆகிய மாநிலங்களிலும் 14.13.2021 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்திலும் பேச்சுப்போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

பிரான்சில் உணர்வடைந்த மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் நிகழ்வு!

தமிழீழ தேச விடுதலைப்போராட்த்திற்கு தமது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பிரதேச்த்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினால் நடாத்தப்பட்டது.

மேலும்

ஒற்றையாட்சியை ஒழித்து பல்தேசங்கள் கொண்ட நாடு என்பதனை ஏற்று அங்கீகரியுங்கள் கஜேந்திரகுமார் எம்பி

சிங்கள பௌத்தத் தீவு என்ற மனோபாவமும் ஒற்றையாட்சி முறைமையும் கடந்த 74 வருடங்களாக நாட்டை பேரழிவுக்குள்ளேயே தள்ளி வந்திருக்கிறது. ஆகவே இப்போதாவது உங்கள் பாதைகளை சீர்செய்துகொள்ளுங்கள். சிறிலங்கா தனது ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்றி மீளுருவாக்கம் செய்யவேண்டும். இந்த இலங்கைத்தீவு பல்தேசமுடைய நாடு என்பதை ஏற்று அதை அங்கீகரியுங்கள். அதன் மூலம் இந்த நாடின் ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

மேலும்

கனடாவில் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம்

கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் சுமந்திரன் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்

மாவீரர் நினைவு சுமந்த தாயக வரலாற்றுத் திறனறிதல் தற்போது ஆரம்பம்!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் ‘தாயக வரலாற்றுத் திறனறிதல்’ இணைப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.அகவை வேறுபாடின்றி அனைவரும் இவ்விணைப்பினுள் தமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இத்திறனறிதலை மேற்கொள்ள முடியும்.

மேலும்

தமிழர் தேசத்தை அங்கீகரிக்கும்போதுதான் இந்தத் தீவு அழிவிலிருந்து மீண்டெழும் – செ.கஜேந்திரன் எம்பி

தமிழித் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் முழுவிபரம் வருமாறு.

மேலும்