தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்காவிட்டால் இந்த நாட்டை நீங்களாகவே அழிப்பதாக அமையும்.

0 0
Read Time:20 Minute, 56 Second

நீங்கள் இனவழிப்புச் செய்தமையினாலேயே ரோம சாசனத்தை ஏற்க மறுக்கின்றீர்கள்.
இன்படுகொலையில் ஈடுபடவில்லையாயின் சர்வதேச விசாரணைக்கு வந்து நிரூபியுங்கள்.
நேற்று 03-12-2021 அன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வலியுறுத்தினார்.


அவரது உரையின் சுருக்கம் வருமாறு.
ரோம் சமவாயத்தின் ஆறாவது உறுப்புரையை இங்கு மேற்கோள் காட்டி எனது உரையை ஆரம்பிக்க விரும்புகிறேன்.
‘இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தின் அல்லது ஒரு தேசிய இனத்தை அல்லது ஒரு இனக்குழுமத்தை அல்லது ஒரு சமயக் குழுவினரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்குடன் செய்யப்படும் கீழ்வரும் செயற்பாடுகளாகும்,
ரோம் சாசனத்தின் 6 ஆம் உறுப்புரையின் பிரகாரம் இனப்படுகொலை என்பது,
அ. அக்குறிப்பிட்ட குழுமத்தை சார்ந்த மக்களை கொல்லுதல்.
ஆ. அக்குழுமத்தை சேர்ந்த மக்களுக்கு பாரதூரமான உடல் உள பாதிப்புகளை மேற்கொள்ளுதல்.
இ. ஒரு இனக் குழுமத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பௌதீக ரீதியில் அழிக்கும் நோக்குடன், அவ்வினக்குழுமத்தின் மீது வேண்டுமென்றே நிர்ப்பந்தங்கள் ஃ கட்டுப்பாடுகள் ஃ மட்டுப்பாடுகள் விதித்தல்.
ஈ. ஒரு குழுமத்தின் பிறப்பு வீதத்தை குறைக்க கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
உ. ஒரு குழுமத்தில் இருக்கும் சிறுவர்களை பலவந்தமாக இன்னொரு இனக்குழுமத்துக்கு மாற்றுதல்.
கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே!
ரோம் சாசனத்தின் 6வது உறுப்புரையானது இனப்படுகொலைக் குற்றம் என்பதனை மேற்கண்டவாறு வரையறை செய்கின்றது. இந்த சர்வதேச சாசனத்தை சிறீலங்கா அரசு தொடர்ந்து ஏற்க மறுத்துவருவதற்கான காரணம் இன்று வெளிப்படையாகின்றது.
அன்று யுத்தம் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, நடைபெற்ற சம்பங்களை கடந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தின்போது தெளிவாக வெளிப்படுத்தியிருந்தேன்.


அங்கு போர் வலயத்தினுள் சிக்கியிருந்த மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததை ஏற்றுக்கொள்வதெனும் முடிவுக்கு மே16 இரவு எட்டுமணியளவில் சிறிலங்கா அரசாங்கம் கொள்கையளவில் முன்வந்திருந்தது.
ஆனால் அங்கு சிக்கியிருந்த ஏறத்தாழ 150,000 மக்களை பாதுகாத்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து வரும் செயற்பாடு, அப்போதைய சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஜோர்டானில் நடைபெற்றுக்கொண்டிருந்த அணிசேரா நாடுகளின் மாநாட்டில் இருந்து மே 17 ம் திகதி திரும்பி வந்தவுடன் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அச்செயற்பாடு நடைபெறவில்லை. 17 ம் திகதி காலை போர் வலயத்தினுள் சிக்கியிருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்பதை நான் விடுதலை புலிகளுக்கு அறிவித்திருந்தேன். ஆனால் 16 ம் திகதி இரவு 10 மணியளவில் மிகவும் பயங்கரமான செய்திகளைத் தாங்கிய பல தொலைபேசி அழைப்புகள் வன்னியிலிருந்து எனக்கு வந்தன.
ஆயுதங்களை மௌனிப்பது எனும் புலிகளின் முடிவை அரசு ஏற்று மக்களை. பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஒத்துக்கொண்ட பின்னரும் கூட, போர் வலயத்தை நோக்கி எழுந்தமானமாக கடும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆட்டிலறித் தாக்குதல்கல் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக அங்கிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் கூறின.
நான் உடனடியாகவே 16-05-2009 இரவு 10.30 மணியளவில் பசில் ராஜபக்ச அவர்களுடன் தொடர்புகொண்டு, ‘ நீங்கள் மக்களின் பாதுகாப்பிற்காகவும் நலனுக்காகவுமே அனைத்தையும் (இந்த யுத்தத்தை ) செய்கிறோம் எனகூறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் அரசாங்கம் ஒத்துக்கொண்டால், அங்கிருக்கும் 150,000 பொது மக்களின் உயிர்களை பாதுகாப்பாக நாளையே அழைத்துவரக்கூடிய கூடிய நிலமை இருக்கும்போது ஏன் பொது மக்கள் மீது இப்படியான கொடூரமான ஆட்டிலறி தாக்குதல்களை பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்கிறது?’ எனக் கேட்டிருந்தேன்.
அவர் தான் பாதுகாப்பு அமைச்சோடு பேசி ஒரு முடிவுக்கு வருவதாக என்னிடம் கூறினார். ஆனால் அவர் மீண்டும் என்னிடம் தொடர்பு கொண்டு, அடுத்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் 17 ம் திகதி நடக்கும் வரை இந்த தாக்குதல் திட்டம் தொடரும் என பாதுகாப்பு அமைச்சு தனக்கு அறிவித்ததாக அவர் கூறினார். இந்த பயங்கரமான நிலைமையின் தாற்பரியத்தை நம்புவதற்கு நீங்கள் மறுக்கலாம், அப்படி நடந்தது என்பதை கூறக்கூட நீஙகள் மறுக்கலாம், ஆனால் அதற்கெல்லாம் நேரடி சாட்சியாக நான் இருக்கிறேன். போர்வலயத்துள் சிக்கியுள்ள 150,000 மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டும் தமது ஆயுதங்களை மௌனிக்கத் தயாராக இருப்பதாக 16 மே பிற்பகல் 4.00 மணியளவில் மிக தெளிவாக என்னூடாக சிறிலங்கா அரசுக்கு அறிவித்திருந்தார்கள். ஆனால் பாதுகாப்பு அமைச்சு ‘ பொதுமக்களை பாதுகாக்கும் அந்த முயற்சியென ஏற்க அடியோடு மறுத்துவிட்டது. மாறாக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தினார்கள் .அதற்கு நான் சாட்சி,
மேலும், கடந்த வருடம் இந்த அவையில் உரையாற்றிய கௌரவ சரத் பொன்சேகா அவர்களே, யுத்ததின் இறுதி நாள் வரை கடுமையான கனரக ஆயுத தாக்குதல்கள் தொடர்ந்து நட்டத்தப்ட்டதாக உரிமை கோரியிருந்தார்.
இப்படியாக போரில் ஈடுபட்ட ஒரு தரப்பு தமது ஆயுதங்களை மௌனிப்பதாக. அறிவித்திருந்த நிலையில், நீங்கள் அதை ஏற்கமறுத்து, தொடர்ந்தும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதென்பது, மக்களின் உயிரிழப்பை முடிந்தளவு அதிகரித்து அந்த ம்க்களை முழுமையாகவோ ஆகக் குறைந்தது பகுதியாகவோ அழிப்பது என்னும் ஒரே நோக்கத்த்திற்காகவே என்பது தெளிவாகிறது.
கனம் அவைத் தலைவர். அவர்களே,
போரில் ஈடுபட்ட ஒரு தரப்பு ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தபோதிலும், போர்வலயத்தில் மக்கள் சிக்குண்டிருப்பதை உறுதியாக தெரிந்து கொண்ட பிறகும், இப்படியாக அந்த பிரதேசம் மீது பீரங்கி தாக்குதலை நடத்தியது இனப்படுகொலை என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு சாதாரணமான ஒரு குற்றம் அல்ல, எவரும் எண்ணிப்பார்க்க முடியாத மிக பயங்கரமான குற்றமிது. பாதுகாப்பு அமைச்சு , இராணுவம் கடற்படை மற்றும் விமானப்படை அனைத்தும் இந்த இனப்படுகொலையின் குற்றவாளிகளே.
அனைவரும் சிறிலங்கர்கள் என சிந்திக்க வேண்டும் என நீங்கள் கூறிக்கொள்கிற இந்த சமயத்தில், சிறிலங்காவில் இப்படியான ஒரு குற்றம் நடந்ததா இல்லையா என உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவாவது , ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்துவது உங்களது பொறுப்பில்லையா? ஆனால் நாம் இது குறித்து பேச முற்படும் போதெல்லாம நீங்கள் எழுத்து நின்று, எந்தவொரு குற்றத்தையும் நீங்கள் இழக்கவில்லை என்றே கூறுகிறீர்கள். அப்படி நீஙகள் குற்றம் இழைக்கவில்லையெனில் எதற்கு அஞ்சுகிறீர்கள்? ஏன் ஓடி ஒழிகிறீர்கள்? நீங்கள் இனப்படுகொலை புரியவில்லையென்றால் , போர் முடிந்து 13 வருடங்கள் ஆன பிற்பாடும் விசாரணைகளுக்குப ;பயந்து ஏன் ஓடி ஒழிகிறீர்கள்?
உண்மையான பொறுப்புக்கூறல் இடம்பெறும் வரைக்கும், பாதிக்கப்பட்ட மக்கள் தாம் பாதுகாப்பாக இருப்பதை உணரும் வரைக்கும், இங்கு சமாதானம் என்பது எட்டாக்கனியே என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அது வரைக்கும் அனைவரும் ஒருங்கிணைந்த ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நினைக்கிறீர்களா? இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொல்வது மட்டும் அல்ல. இறுதி யுத்தம் அதன் உக்கிர நிலையை அடைய முன்பு, வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் ஏறத்தாழ 450,000 பொதுமக்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் சிறிலங்கா அரசானது அங்கு 70,000 பொதுமக்களே இருப்பதாக கூறிக்கொண்டு, 70,000 பேருக்கான உணவையும் மருந்தையுமே அனுப்பி அந்த மக்களைப் பட்டினி போட்டது. அதன் மூலம், அந்த மக்கள் முழுமையாகவோ பகுதியாகவோ அழியக்கூடிய நிலையை உருவாக்கியிருந்தீர்கள் . இது இனப்படுகொலையே.
(இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் சரத் வீரசேகர கொதித்தெழுந்து கஜேந்திரகுமாரின் பேச்சை குழப்பி, தாம் இனப்படுகொலை புரியவில்லை என்றும், பொதுமக்களை மீட்டோம் என்றும் கூறினார்).
சரத் வீரசேகர அவர்களே,
இனப்படுகொலையில் நீங்களும் ஒரு குற்றவாளி என்றே நாம் கூறுகிறோம். இனப்படுகொலை நடந்ததாக நான் பொய் கூறுவதாக நீங்கள் கூறினால், அதை ஏன் நீங்கள் சரவ்தேச நீதிமன்றிற்கு துணிவுடன் சென்று சாட்சிகளை கொடுக்கக் கூடாது .? இனப்படுகொலை செய்யவில்லையெனில் ஏன் நீங்கள் பயமின்றி ரோம் சாசனத்தில் கையெழுத்திடக்கூடாது ?
நீங்கள் குற்றமற்றவர்களெனில் , ஏன் அஞ்சுகிறீர்கள்? நாங்கள், தமிழ் பிரதிநிதிகள் இந்த சபையில் கூறுவதைக்கூட கூறவிடாமல குழப்புகிறீர்கள்! எதற்காக ? நீங்கள் குற்றமற்றவர்களெனில் ஏன் பயபபிடுகிறீர்கள்? இன்று யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது, ஆனாலும் வடக்கு கிழக்கில் பாரிய இராணுவ கட்டமைப்பை பேணிக்கொண்டு இருக்கிறீர்கள். வடக்கு கிழக்கில் 10 பேருக்கு 1 என்ற வி;கிதத்தில் இராணுவம் நிலைகொண்டிருக்கிறது. வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கிறது. இப்படி இராணுவத்தை நிலை நிறுத்துவதன் மூலம் மக்களை ஒரு பயப்பிராந்திக்குள் வைத்திருக்க முயல்கிறீர்கள்.
போர் முடிந்து 13 வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் நீங்கள் செய்த குற்றங்களின் ஆதாரங்கள் வெளியே சென்றுவிடும் என அஞ்சுகிறீகள். ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளர் தனது கடந்த அறிக்கையில் குறிப்பிட்டபடி சிறிலங்கா படையினரின் குற்றங்கள் குறித்து 120,000 கோவைகள் தம்மிடம் இருப்பதாக கூறியதையிட்டு அஞ்சுகிறீர்கள். நீங்கள் உண்மைகளை கண்டு அஞ்சுகிறீர்கள். உண்மைகளைக் கண்டு பயந்து ஓடிக்கொண்டு இருக்கும் வரையில், இனப்படுகொலை புரிந்தவர்களை பாதுகாத்துக்கொண்டு இருக்கும்வரையில், இனப்படுகொலை என்பது தப்பிக்கொள்ளகூடிய ஒரு குற்றம் என நம்பிக்கொண்டிருக்கும் வரையிலும் உங்களால் சமாதானத்தை கட்டியெழுப்பவும் முடியாது,. பாதுகாப்பாக உணரவும் முடியாது.
உங்கள் சரிபிழைகளை கண்டுகொள்ளாமல் உங்களை ஆதரிக்க கூடியவர்களை நண்பர்களாக்கி கொண்டு, இனப்படுகொலைக்கான நீதியை வழங்காமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொண்டு, உங்கள் பிழைகளை மறைக்கக்கூடிய கூட்டாளிகளை பெறுவதற்காக உங்கள் நாட்டையே நீங்கள் கூறுபோட்டு விற்க தொடங்கியிருக்கிறீர்கள். நீங்கள் நேசிப்பதாக கூறுகின்ற இந்த நாட்டின் ஆத்மாவையே ஒவ்வொரு நாளும் விற்கத் தொடங்கியிருக்கிறீர்கள். . இன்று, சிறிலங்கா, பங்களாதேசத்திடமும் கையேந்துகின்ற நிலமை வந்திருக்கிறது. போர் முடிவடைந்து 13 வருடங்களில் நீங்கள் சாதித்தது இதைத்தான். அதைப் பார்க்க வெட்கமாக இல்லையா?
இந்த தீவில் இருக்கும் ஒவ்வொரு தேசங்களும் தம்மை பாதுகாப்பாக உணரும் போதுதான் இது உண்மையான சிறீலங்காவாகும். இந்தத் தீவில் இருக்கும் ஒவ்வொரும் தேசங்களும் தம்மை பாதுகாப்பாக உணரும் போதுதான் தாம் சிறீPலங்கன் என ஒருவனால் விசுவாசமாக உணர முடியும். அது வரைக்கும் நீங்கள் விரும்புகிற அந்த சிறில்ங்கா எனும் நாட்டை உருவாக்கிகொள்ள உங்களால் முடியாது.
மாறாக, நீங்கள் இனவாத பாதையிலேயே தொடர்ந்தும் சென்று இனங்களுக்கிடையிலே பிரிவினையையும் குரோதத்தையும் வளர்க்கிறீர்கள். அப்படி இந்த மக்களை பிளவுபடுத்தி வைப்பதன் மூலமே உங்கள் வாக்குவங்கியை நீங்கள் நிலைநிறுத்திக் கொள்கிறீர்கள். ஆனால் இன்று இந்த நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளால் சாதாராண சிங்கள் மக்களே என்றுமில்லாதவாறு, முதல் தடவையாக தமது தலைவர்களுக்கு எதிராக கேள்வி கேட்க தொடங்கியிருக்கிறார்கள். நானோ அல்லது எனது சக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களோ சொல்வதை இனவாத பேச்சு என இதுவரை காலமும் சொல்லி தள்ளி வைத்த சாதாரண சிங்கள மக்களும் இன்று உண்மையை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். நாம் சொல்பவற்றை செவிமடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழர்கள் குறித்தும் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்தும் சாதாரண சிங்கள மக்களுக்கு அவர்களின் தலைவர்களால் சொல்லப்பட்டு வந்த பொய்கள் குறித்து கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், தொடர்ந்தும் நீங்கள் இந்த அராஜகப் போக்கிலேயே போக முடியாது. மாறாக இந்த போக்கிலேயே போனால், நாட்டின் ஸ்திரத்தன்மை குலைந்து பிளவடையப்போவது சிங்கள தலைவர்களாலேயே அன்றி தமிழ் மக்களால் அல்ல. ஏனெனில், உண்மைகள் புரியத்தொடங்கும்போது, ஒரு சிங்களவர் எழுந்து ‘கருணையையும் அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் புத்தர் பெருமானை நான் பின் தொடர்கிறேன், பூசிக்கிறேன். ஆனால் எங்களது பெயரினால் இப்படியான கொடூரங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்றதெனில், அந்த மக்களுக்கு, அவர்கள் விரும்புகின்ற பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்’ என கூறுவார் என நம்புகிறேன்.
உங்கள் பாதையை நீங்கள் மாற்றிக்கொள்ளாது விடின், நிச்சயம் அப்படி ஒரு நிலைமை உருவாகும். தமிழர்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல, அவர்கள் யாருக்கும் எதிராக போருக்கும் முன்வரவில்லை. அவர்கள் கேட்பது எல்லாம் தமக்கே உரித்தான உரிமைகளை மட்டும்தான், அதற்காகத்தான் கடந்த 75 வருடங்களாக அவர்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். சிறிலங்கா ஒரு நாடாக ஸ்திரத்தன்மையுடன் தொடர்ந்தும் இருக்கவேண்டுமெனில் நீங்கள் கடந்த 74 வருடங்களாக செல்லும் அதே பாதையில் தொடர்ந்தும் செல்லமுடியாது. சிறிலங்கா ஒரு பல்தேசங்கள் கொண்ட நாடென்பதை ஏர்றுக்கொள்ளாதவரைக்கும் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை அங்கீகரிக்காத வரைக்கும், நீங்கள் எங்களை, மட்டுமல்லாது, உங்களையும் சேர்த்தே அழிக்கப்போகிறீர்கள் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்ளுகிறேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment