தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தினமாகிய இன்று 15.09.2021 புதன்கிழமை பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வுகள் மழைக்கு மத்தியில் உணர்வோடு ஆரம்பமாகின.
மேலும்Day: September 15, 2021
புலிகள் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை – -கஜேந்திரகுமார் எம்பி
13-09-2021 திகதி ஆரம்பமாகியுள்ள ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பேசப்படும் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டினை விளக்கும் ஊடக மாநாடு இன்று ZOOM செயலி ஊடாக இடம்பெற்றது.
மேலும்ஜெனிவாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதாரநிழற்படக் காட்சிப்படுத்தல்.
செப்டெம்பர் முதலாம் திகதி பிரான்சுப் பாராளுமன்ற முன்றலில் ஆரம்பித்த நீதிக்கான பயணம் செப்டெம்பர் 11ஆம் திகதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்றலை சென்றடைந்ததைத் தொடர்ந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை போன்றவற்றை நோக்கி கவனயீர்ப்பு மற்றும் தமிழின அழிப்பு ஆதார நிழற்படக் காட்சிப்படுத்தலை தொடர்ச்சியாக செய்துவருகின்றனர்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற வாகனத்தை நோக்கி நடக்கிறார். எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஆம் அவரது தியாகப்பயணம் ஆரம்பமாகிவிட்டது.
மேலும்