தாம் வெந்து தமிழ் காத்த கந்தக மலர்களின் நினைவுகளைச் சுமந்த கானப் பதிவு
பல்லவி
தேசப் புயல்கள் பேசும் கணங்கள்
தேகம் புல்லரிக்கும் – அவர்
வீசும் தென்றலாய் பாசம் பொழிந்த
நாட்கள் கண் நனைக்கும்
பிறர்க்காக தம்மை கொடையாக்கும் ஈகம்
கிடைக்காது மீண்டும் இதுபோன்ற வீரம்
கந்தக மலர்கள் அற்புதங்கள்
வெந்துமே எமைக் காத்த தெய்வீகங்கள்
கந்தக மலர்கள் அற்புதங்கள்
வெந்துமே எமைக் காத்த தெய்வீகங்கள்
தேசப் புயல்கள் பேசும் கணங்கள்
தேகம் புல்லரிக்கும் – அவர்
வீசும் தென்றலாய் பாசம் பொழிந்த
நாட்கள் கண் நனைக்கும்
சரணம் 1
கொலை வாளினை ஏந்தி
பகை மேவிடும் வேளை
வீரர் தேர் இழுப்பார் – காலனை
தீயுள் வீழவைப்பார்
புலன் யாவுமே வென்று
கருவேங்கையாய் சென்று
ஆவி ஒப்படைப்பார் – வெற்றிகள்
எமதாக தான் வெடிப்பார்
அச்சம் என்பதறியார்கள் எச்சம் இன்றி மறைந்தார்கள்
மாந்தருக்குள் மாணிக்கம் எனவாகினார்
அச்சம் என்பதறியார்கள் எச்சம் இன்றி மறைந்தார்கள்
மாந்தருக்குள் மாணிக்கம் எனவாகினார்
ஏங்கும் நெஞ்சம் உமை எண்ணி விம்மும்
தாங்கும் உம் கனவை தமிழீழம் வெல்லும்
தேசப்புயல்கள் பேசும் கணங்கள்
தேகம் புல்லரிக்கும் – அவர்
வீசும் தென்றலாய் பாசம் பொழிந்த
நாட்கள் கண் நனைக்கும்
சரணம் 2
நிலை மாறிட – கோடி
வழி வந்திடும் போதும்
தாகம் ஈழம் என்பார் – கொள்கையில்
மாற்றம் இன்றிச் சென்றார்
பிர பாகரம் என்னும்
பெரும் காப்பியம் தன்னில்
ஆழ முக்குளித்தார் – அடையாளம்
இன்றியும் புன்னகைத்தார்
கற்பனைக்குள் அடங்காத அர்ப்பணிப்பின் உச்சங்கள்
பூவுக்குள் பூகம்பப் பொறி தாங்கினார்
கற்பனைக்குள் அடங்காத அர்ப்பணிப்பின் உச்சங்கள்
பூவுக்குள் பூகம்பப் பொறி தாங்கினார்
மண்ணுள் வாழ்தலே வேருக்குப் பெருமை
தியாகத்தின் பொருள்கூற நீரே நல் உவமை
தேசப் புயல்கள் பேசும் கணங்கள்
தேகம் புல்லரிக்கும் – அவர்
வீசும் தென்றலாய் பாசம் பொழிந்த
நாட்கள் கண் நனைக்கும்
பிறர்க்காக தம்மை கொடையாக்கும் ஈகம்
கிடைக்காது மீண்டும் இதுபோன்ற வீரம்
கந்தக மலர்கள் அற்புதங்கள்
வெந்துமே எமைக் காத்த தெய்வீகங்கள்
கந்தக மலர்கள் அற்புதங்கள்
வெந்துமே எமைக் காத்த தெய்வீகங்கள்
தேசப் புயல்கள் பேசும் கணங்கள்
தேகம் புல்லரிக்கும் – அவர்
வீசும் தென்றலாய் பாசம் பொழிந்த
நாட்கள் கண் நனைக்கும்