எங்களது விடுதலைக்கு ஒன்றிணைந்து செயற்படுங்கள் தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும்

எமது இளையவர்கள் சிங்கள மக்களுக்கு எதிராக அல்ல தமது இறமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே ஆயுதம் ஏந்தினார்கள்! க.வி.விக்னேஸ்வரன்

சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளையோர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அதேநாட்டில் தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே  தமது அடையாளத்தை பாதுகாக்க ஆயுதம் ஏந்தவேண்டியிருந்தது ஆதனால், அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20 க்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் ஒடுக்கப்பட்டார்கள்.என குறிப்பிட்டார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும்,தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின்  தலைவருமான பாராளமன்ற உறுப்பினர் நீதியலசர் க.வி.விக்னேஸ்வரன்.

மேலும்