அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் மூன்று ஆசிரியர்கள் ‘’கலைச்சுடர்’’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
அத்தோடு 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவரும் பத்து ஆசிரியர்களும் 10 ஆண்டுகளுக்கு பணியாற்றிவரும் 02 ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.
மேலும் 2019, 2021 ,2022 ஆண்டுகளில் தமிழ்க்கலைத் தேர்வுகளில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் சான்றிதழும் பதக்கமு ம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
மதிப்பளிப்பினை கனடாவிலிருந்து வருகைத் தந்திருந்த பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவை கார்ஜ் லே கோணேஸ் நகர பிதாக்கள் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, ஏனைய கட்டமைப்புகளின் உறுப்பினர்கள் தமிழ்க்கலை ஆசிரியர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழா மாலை 6.30 மணியளவில் நிறைவுபெற்றது.