பிரான்சில்‌‌‌ அனைத்துலக ரீதியில் உணர்வோடு இடம்பெற்றமாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு!

0 0
Read Time:2 Minute, 47 Second

ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து இந்த இலட்சியத்திற்காகப் போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்.”

இவர்களை நெஞ்சங்களில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நேறறு 25.05.2024 சனிக்கிழமை பி. பகல் 15.00 முதல் 18.00 மணிவரை பிரான்சு 36, Av. de la Division 93000 Bobigny பகுதியில் உணர்வோடு இடம்பெற்றது

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர்  திருவாட்டி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் முக்கிய செயற்பாட்டாளர் திரு. செவ்வேள் அவர்கள் ஏற்றிவைத்தார்.

மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடரினை 08.11.2012 அன்று பிரான்சில் சாவடைந்த கேணல் பரிதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார். 15 மாவீரர்களின் திரு உருவப் படங்களிற்கான ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர். அகவணக்கத்தைத் தொடர்ந்து வீரவணக்கம் உறுதிப்படுத்தல் அறிக்கைகள் வாசித்தல் (மொத்தம் 15 மாவீரர்கள்) இடம்பெற்றது.

மாவீரர் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.தொடர்ந்து மாவீரர் குடும்பத்திற்கு தேசியக்கொடியும் அவர்களின் திருஉருவப் படங்களும் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

தேசியக்கொடி இறக்கல், கையேற்றல் என்பவற்றோடு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்தது.

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற‌ தாரக‌மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment