சுவிசில் தமிழ் ஆற்றுப்படுத்துனர்கள்

0 0
Read Time:7 Minute, 46 Second

உடல்மற்றும் உளநலன் மேன்மைக்கு நோயுறும் வேளைகளிலும் இறப்பை எதிர்நோக்கும் சூழல்களிலும் மனிதர்களுக்கு சமய-, பண்பாட்டு மற்றும் தாய்மொழியில் ஆற்றுப்படுத்தல் உதவி ஒரு தேவையாகஅமைகின்றது.

கற்கை

சுவிற்சர்லாந்தில்பேர்ன்மாநிலத்தில் வாழும் மக்கள் பல் சமயப் பல்பண்பாட்டினைக்கொண்டவர்களாகவாழ்ந்து வருகின்றனர். இவ்வேளை இம் மக்களுக்கு தத்தமதுசமயத்தில், பண்பாட்டில், தாய்மொழியில் நற்தகைசால் தேரச்சித்திறன் கொண்ட ஆற்றுப்படுத்துனர்கள் தேவையினை உணர்ந்து இதற்கான கற்கையினை வழங்குவதற்கு ஐ.கே.கேஅமைப்பினால் பல்சமய இல்லத்தில் டிசம்பர் 2019 பல்சமய ஆற்றுப்படுத்துனர் மன்றம் „Verein multireligiöse Begleitung“ நிறுவப்பட்டிருந்தது.

இம்மன்றத்தில்பல்சமய இல்லமும், சைவநெறிக்கூடமும் நிறுவன உறுப்பினராக உள்ளனர். இவர்களின் கடந்தகால கூட்டு உழைப்பில் «பேர்ன் செயல்முறை அறிவியல் பல்கலைக்கழகத்துடன்» இணைந்து சான்றிதழுடன் கற்கைநெறி உருவாக்கப்பட்டிருந்தது.

கற்கை நிறைவு

2022 – 2023 காலத்திற்குள்முதலாம் கற்கை „FORTBILDUNG ZUM EHREMAMTLICHEN BEGLEITER“நடாத்தப்பட்டது. இதில் கிறித்தவ, இசுலாமிய, யூத, சைவ சமயத்தவர்களும், சமயம் சாராதவர்களுமாக 14 ஆட்கள் பங்கெடுத்தனர். இவர்களுக்கான கற்கை 14. 03. 2023 செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

பேர்ன்மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில் கற்கைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 15.30 மணிமுதல் நடைபெற்றது. முற்பகல் 11.00 மணிக்கு ஊடக சந்திப்பும் இக்கற்கைதொடர்பான தகவலும் வழங்கப்பட்டிருந்தது.

இக்கற்கையினை பேராசிரியை. மற்றும் முனைவருமான திருமதி. அந்திரேயா ஆபிரகாம் மற்றும் சிறப்பு ஆற்றுப்படுத்துனர் திரு. பாஸ்கால் மோசிலி ஆகியோர் கடந்த இரு வருடங்களில் நெறிப்படுத்திநடாத்தியிருந்தனர்.

சான்றிதழ்

பேர்ன்மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் மற்றும் மூதாளர் இல்லங்களிலும் ஆற்றுப்படுத்துவதற்கு தகைவழங்கும் சான்றிதழ் கற்கை நிறைவு செய்த அனைவருக்கும் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் திருநிறை. பாஸ்கால் மோசிலி இருவராலும் வழங்கி வைக்கப்பட்டது.

இச்சான்றிதழ்களுடன்அடுத்த கட்டமாக பேர்ன் மாநில அரசின் அனைத்து துறைகளுக்குள்ளும் ஆற்றுப்படுத்துனர்கள் உட் செல்வதற்கு ஏதுவாகஅடையாள அட்டையும் வழங்கப்படும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.

நோக்கம்

இக்கல்வியின்நோக்கம் இவ்வாறு அமைந்திருந்தது: பல் சமயத்தவர்களும் அல்லதுசமயம் சாராதவர்களும் தமது தனிப்பட்ட திறனுடன்மேலும் நுணுக்கமான செயற்திறன் கல்வியினை ஆற்றுப்படுத்தல் துறையில் பெற்றுக்கொள்வர்.

கற்கைத் தகை

இக்கற்கையில்பங்கெடுப்பதற்கான தகைகளாக இவை வேண்டப்பட்டிருந்தன:

• தொழிற்கல்வி அல்லது தன்னார்வ அமைப்பில் நீண்டபட்டறிவு

• தமது பண்பாடு – சமயம்தொடர்பான ஆழமான அறிவு

• திடமான உள்ளம்

• உணர்ச்சிகளைகத் தாங்கிக்கொள்ளும் (கட்டுப்படுத்தும்) தகை

• மனிதர்களுடன் உரையாடும் திறன் – விருப்பு

• தளர்வான திறந்த உள்ளம்

• சிறந்த தொடர்பால் தகை

• தன்னார்வத் தொண்டில் பங்கெடுக்க தேவையான நேரம்

• குற்றவியல் அற்ற நற்பதிவுச்சான்று

• சுவிசில் பாடசாலைக் கல்வியில் பெற்ற மொழித்திறன் (ஆகக்

குறைந்ததுபி.1 (B1) தரத்தில் மொழித்திறன்).

உட்பொருள்

இக்கற்கையில்பங்கெடுத்து ஆற்றுப்படுத்தல் கல்வியினை மேற்கொண்டவர்கள் துறைசார் ஆற்றுப்படுத்துனர்களுடன் இணைந்து மருத்துவமனைகளில், மூதாளர் இல்லங்களில், நேரடியாக உள்ளிருப்புப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டனர்.

தாம்கற்கையில் பெற்றுக்கொண்ட கல்வியினையும் மற்றும் நேரடியாகப் பெற்றுக்கொண்ட பயிற்சிகளையும் பேர்ன் செயல்முறை அறிவியல் பல்கலைக்கழக மேற்பார்வை குழுமத்தில் பரிமாறிக்கொண்டனர்.

பல்உவமைகளைக் கொண்டு கற்கையில் ஆற்றுப்படுத்தல் கோட்பாட்டு மற்றும் செயற்பாட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நோய், இறப்பு மற்றும் நலன்பேண் செயல்கள் தொடர்பான கற்கையும் உள்ளடக்கப்பட்டது.

நிறைவு

கற்கைநெறியினை ஆள்கை செய்த இரு பேராசிரியர்களுக்கும் சைவநெறிக்கூடத்தால் பூமாலைகளை சிவருசி. சசிக்குமார் அணிவித்தார். கற்கை மன்றம் இக்கற்கை நடைபெற உதிய அனைவருக்கும் நினைவுப்பரிசினையும் வழங்கியது.

பல்சமயஇல்லத்தின் «வணக்கம்» உணவகத்தால் சமைக்கப்பட்ட தமிழ்ச் சைவச் சிற்றுண்டிகள் நிறைவில் அனைவருக்கும் வழங்கப்பெற்று நிகழ்வு நிறைவுற்றது.

சைவநெறிக்கூடம்

முன்னர்பேர்ன் பல்கலைக்கழகத்தில் ஆற்றுப்படுத்தல் துறையில் முதலாவது சைவசமயத்தவராக பட்டயக்கல்வியினை திருநிறை. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் நிறைவு செய்திருந்தார்.

இம்முறைசைவநெறிக்கூடத்தின் ஏற்பாட்டில் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் இருந்து ஆற்றுப்படுத்தல் கற்கையினை திருமதி ராஜ்கண்ணா சிவாஜினி, திரு. திருச்செல்வம் முரளிதரன், திரு. குழந்தை விக்னேஸ்வரன், திரு. தில்லையம்பலம் சிவகீர்த்தி ஆகியோர் நிறைவு செய்துள்ளனர்.

இதன்பயன்பேர்ன் மாநிலத்தில் தமிழ் ஒலிக்கும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் தமிழ்மக்களுக்கான பொதுப்பணிகளுடன் ஆற்றுப்படுத்தலையும் மேலும் சிறப்புடன் மேற்கொள்ளும் என சிவருசி. சசிக்குமார்உறுதிசெய்தார்.

https://drive.google.com/drive/folders/1ShTgDvWdtENCtNZDivZRXIBDSpw_8TTN?usp=sharing

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment