இத்தாலியில் பலெர்மோ நகரில் சிறப்பான பட்டத்தை பெற்று ஈழத்தமிழர்களை பெருமைபடச்செய்த ஈழப் பெண்மணிக்கு பட்டமளிப்பு.

இத்தாலி பலெர்மோ நகரில் கடந்த 3 தசாப்தங்களாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்தவரான திரு.திருமதி. பாலசிங்கம் அவர்களின் புதல்வி செல்வி. வினுசா அவர்கள் 15.10.2021 பலெர்மோவில் Universita degli Studi di Palermo பல்கலைக்கழகத்தில் ( பொருளாதார வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புத்துறை) இதற்க்காக நடைபெற்ற தேர்வில் மொத்தமாக எடுக்க வேண்டிய 110 புள்ளிகளில் 109 புள்ளிகளைப் பெற்று சிறந்த மாணவியாக செல்வி. வினுசா பாலசிங்கம் தெரிவாகியுள்ளார். இவருக்காக சிறப்பான பட்டமளிப்பையும்> மதிப்பளித்தலையும்> Prof. Lo Verde Massimo அவர்களும் Prof.ssa Perra Alessandra> Prof. Simon Fabrizio, Prof. Asmundo Adam, ஆகியோர் செல்வி. வினுசா விற்கு பட்டமளித்து மதிப்பளித்திருந்தனர். பட்டமளிப்பில் கலந்து கொண்ட பலநூறு மாணவர்களில் எம்தேசப்புதல்வி சிறப்பான பட்டத்தை பெற்றுக்கொண்டமை இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும்