பிரான்சு வித்றி பகுதியில் இரண்டு தினங்கள் இடம்பெற்ற தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

0 0
Read Time:1 Minute, 41 Second

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்

மற்றும் இறுதிப் போட்டிகள் இரண்டாம் நாளாக நேற்று 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்றி பகுதி விளையாட்டுத் திடலில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.

இப்போட்டியில் மாணவர்கள் சிறப்பாகப் பங்குகொண்டு தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியதைக் காணமுடிந்தது.நேற்றைய தினம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் , வெற்றிப் பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

குறித்த போட்டிகள் கடந்த 29.06.2024 சனிக்கிழமை ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து எதிர்வரும் 06.07.2024 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு சார்சல் நெல்சன் மண்டேலா விளையாட்டுத் திடலில் இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

 (பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment